ADDED : ஏப் 18, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகர் காமாட்சி அம்மன் கோவில் அருகே வசித்து வந்தவர் நடராஜ், 74.
இவர் நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, பாரதிதாசன் நகர் அருகே ரிங்ரோட்டில், சுசூகி ஆக்சஸ் மொபட்டில் சென்றார். அவ்வழியாக வந்த கார், மொபட் மீது மோதியதில், நடராஜ் படுகாயமடைந்து உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

