ADDED : பிப் 23, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, பெருகோபனபள்ளியில் நேற்று, 35ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது.
இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட காளைகளை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர். குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக, 1.50 லட்சம் ரூபாய், 2ம் பரிசாக 1.25 லட்சம் ரூபாய்,3ம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என, 64க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை காண, 5,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.