/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபைல் டவரில் ஏறி பெயின்டர் போராட்டம்
/
மொபைல் டவரில் ஏறி பெயின்டர் போராட்டம்
ADDED : ஜன 05, 2026 07:25 AM
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு தினமும் வருவாய்த்துறை மூலம், வருகை பதி-வேடு பதிவு செய்யப்படும். முகாமில், மகேந்-திரன், 34, மற்றும் அவரது மனைவி சிந்துஜா, 30, ஆகியோர் தங்கியுள்ளனர்.
மகேந்திரன் பெயின்டர் வேலை செய்து வரு-கிறார். கடந்த, 1ம் தேதி வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சபரிமலை சென்று விட்டார். கடந்த, 3 நாட்களாக மகேந்திரன் முகாமில் இல்லாததால், வருகை பதிவேட்டில் 'ஆப்சென்ட்' போடப்பட்டது. நேற்று திரும்பி வந்த மகேந்திரன், தனக்கு 'ஆப்சென்ட்' போடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
ஆவலப்பள்ளியில் உள்ள ஜியோ டவரில் நேற்று மாலை, 5:30 மணிக்கு ஏறி, கோவிலுக்கு சென்ற தனக்கு 'ஆப்சென்ட்' போடப்பட்டுள்ளதாகவும், 'பிரசன்ட்' போட வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.நல்லுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால், 6:45 மணி வரை அவர் இறங்கி வராததால், தீயணைப்புத்து-றையினர் டவரில்
ஏறிச்சென்று, அவரை பத்திர-மாக மீட்டனர். மகேந்திரனை, போலீசார் எச்ச-ரித்து அனுப்பிவைத்தனர்.

