/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பஞ்.,களில் கிராம சபை கூட்டம்
ADDED : ஏப் 30, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 333 பஞ்.,களிலும் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 333 பஞ்.,களிலும் நாளை காலை, 11:00 மணிக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்திலிருந்து வந்துள்ள கூட்ட பொருள் தொடர்பாக விவாதிக்கப்பட
உள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில், தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கிராம சபை கூட்டம், சிறப்பாக நடக்க அனைத்து தனி அலுவலர் மற்றும் பி.டி.ஓ.,க்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த கிராம சபை கூட்டத்தில், தங்கள் குறைகளை, கோரிக்கைகளை கூறலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

