ADDED : நவ 04, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரி அருகே பட்டாளம்மன் மற்றும் முத்தப்பா கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
தொடர்ந்து, மேள, தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அர்த்தக்கூர் கிராமத்திற்கு பட்-டாளம்மன், முத்தப்பா சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு செல்-லப்பட்டு, அங்கு விவசாயம், செழிக்கவும், பொதுமக்கள் நோய், நொடியின்றி வாழவும் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், அர்த்-தக்கூர் கிராமத்தில் இருந்து, தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரிக்கு சுவாமிகள் கொண்டு வரப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.