/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர் திருவிழாவையொட்டி மயில் வாகன உற்சவம்
/
தேர் திருவிழாவையொட்டி மயில் வாகன உற்சவம்
ADDED : மார் 22, 2024 07:12 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா கடந்த, 19 ல், திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்றிரவு உற்சவ மூர்த்தி, தேர்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். இரவு, 9:00 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மயில் வாகன உற்சவம், நேற்றிரவு நந்திவாகன உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் வரும், 24 இரவு, 9:00 மணிக்கு திருக்கல்யாணம், 25 காலை, 10:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

