/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
/
வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
ADDED : ஆக 18, 2025 02:42 AM
உத்தனப்பள்ளி:உத்தனப்பள்ளி அருகே, வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த டி.குருபரப்பள்ளி கிரா-மத்தில், வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்-நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல கட்டமாக, மனு கொடுக்-கப்பட்டது. மேலும், ஓசூர் சப்-கலெக்டர்
அலுவலகத்தில் கடந்த ஏப்., 29ம் தேதி போராட்டம் நடத்தப்
பட்டது.
கடந்த மாதம், 7ம் தேதி, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் காத்தி-ருப்பு போராட்டம் நடந்தது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், ஒரு மாதத்தில் வீட்டு
மனைப்பட்டா வழங்குவதாக
உறுதியளித்தனர்.
ஆனால் அதிகாரிகள் கூறியது போல், வீட்டுமனை வழங்க-வில்லை. எனவே, டி.குருபரப்பள்ளி கிராமத்தில் வசிக்கும், 100க்கும் மேற்பட்டோர், அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து போராட்டம் நடத்த, தமிழ்நாடு விவ-சாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமையில் நேற்று திரண்டனர்.
இதையறிந்த, சூளகிரி தாசில்தார் வளர்மதி மற்றும் உத்தனப்-பள்ளி ஸ்டேஷன் எஸ்.ஐ., தினேஷ்குமார் ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தி, தகுதியுள்ள பயனாளிகள் புதிய மனுக்கள் வழங்கினால்,
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
யளித்துள்ளனர். அதனால் போராட்டம் தற்காலிகமாக
கைவிடப்பட்டது.

