sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

/

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்


ADDED : டிச 27, 2024 07:42 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அடுத்த மடிவாளத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை, அத்திப்பள்ளி போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரவுடி சுனில், கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ரவுடி மனோஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஜிகினி போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்திப்பள்ளி இன்ஸ்பெக்டர் ராகவ் கவுடா தலைமையிலான போலீசார் ரவுடி சுனிலை பிடிக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த ரவுடி சுனிலை போலீசார் பிடிக்க முயன்றபோது, சுனில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.






      Dinamalar
      Follow us