/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண் பார்க்க சென்ற போலீஸ்காரர் விபத்தில் பலி
/
பெண் பார்க்க சென்ற போலீஸ்காரர் விபத்தில் பலி
ADDED : ஏப் 24, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட் டம், சோளிங்கர் அடுத்த கீழாண்டை மோட்டூரை சேர்ந்தவர் திலீப், 28. சென்னை ஆவடி வீராபுரத்தில், பட்டாலியன் போலீசாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் செய்ய வீட்டில் பெண் தேடி வந்தனர். நேற்று காலை, 7:00 மணியளவில் பெண் பார்க்க, வீட்டிலிருந்து பல்சர் பைக்கில் வாலாஜா நோக்கி திலீப் சென்றார். கொடைக்கல் பால்பண்ணை அருகே, அங்குள்ள வளைவில், கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கொண்டபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

