தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் கொண்டாட்டம்


ADDED : ஜன 15, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடந்தது. முன்ன-தாக பள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி மேற்கொள்ளப்-பட்டது. பல வண்ண கோலமிட்ட பள்ளி வளாகத்தில், புதிய பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு பொங்கல் படை-யலிட்டு வழிபட்டனர். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. இதில், மாணவர்கள், ஆசிரி-யர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மத்துார், சிவம்பட்டி, நாகம்பட்டி, களர்பதி, கொண்டமாண்டப்-பட்டி, அந்தேரிப்பட்டி உள்ளிட்டபஞ்., அ லுவலகம் முன்பு, பஞ்., நிர்வாகம் சார்பில், வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, பொங்கல் வைத்து நேற்று கொண்டாடினர். பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி, போச்சம்பள்ளி, ஜிங்கல்கதிரம்பட்டி உள்-ளிட்ட பஞ்., அலுவலகங்களில், பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடப்பட்டது.* பென்னாகரத்தை அடுத்த செங்கனுார் ஊராட்சி சார்பாக சின்-னப்பள்ளத்துார் கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்-பட்டது. சமத்துவ பொங்கல் வைத்தும், பள்ளி வளாகத்தில் மாகோனி, புங்கன், அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டும் விளையாட்டு போட்டிகளாக கயிறு இழுத்தல், கோலப்போட்டி, லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்-தியும், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் பழனி, ஆசிரியர் கல்பனா, மேற்பார்வை பொறியாளர் மோதிலால் நேரு, ஊராட்சி செயலர் ரங்கநாதன், பணித்தள பொறுப்பாளர்கள் கங்கா, மாரியாத்தாள், கணினி பணியாளர் புஷ்பா உட்பட ஊர்மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us