/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு
/
ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு
ADDED : ஜன 06, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : திருவண்ணாமலை மாவட்டம், பாலாநந்தல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகள் சிந்துநதி, 23.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 3 இரவு, 7:40 மணிக்கு ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த சிந்துநதி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.