/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2.76 கோடியில் திட்டப்பணி துவக்கம்
/
ரூ.2.76 கோடியில் திட்டப்பணி துவக்கம்
ADDED : பிப் 06, 2026 10:10 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி பஞ்., மாதர்சனப்பள்ளி, எம்.தொட்டி, சிகரலப்பள்ளி ஆகிய கிராமங்களில், 2.76 கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் பிரகாஷ் எம்.எல்.ஏ.,விற்கு, 5 ரூபாய் நாணயங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர்.
தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், நாகேஷ் மற் றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

