ADDED : செப் 29, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருடியவருக்கு 'காப்பு'
போச்சம்பள்ளி, செப். 29-
திருப்பத்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் ஆதியூர் கிராமத்தை சேர்ந்த குமார், 47, என்பவர் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 11ல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டி டாஸ்மாக் கடை எதிரில், பெரியபுளியம்பட்டி அடுத்த, காரகுட்டமேடு பகுதியை சேர்ந்த சிவலிங்கம், 45, என்பவரின் ஹீரோ எச்.எப்.டீலக்ஸ் என்ற பைக்கை திருடி சென்றுள்ளார். சிவலிங்கம் புகார் படி, பாரூர் போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, வாகனத்தை தேடி வந்த நிலையில், பைக்கை சாலை பணியாளர் குமார் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.