/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தர்ணா போராட்டம்
/
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தர்ணா போராட்டம்
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தர்ணா போராட்டம்
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தர்ணா போராட்டம்
ADDED : டிச 20, 2025 07:12 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று தர்ணா போராட்டம் நடந்-தது.
தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பட்டது போல், அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி, நேற்று முன்தினம் சென்னையில் தமிழ்நாடு செவி-லியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் நேற்று கைது செய்-தனர். இதை கண்டித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன், நேற்று செவிலியர்கள் தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்கு-றுதிப்படி, அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவ-ரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர் கண்கா-ணிப்பாளர் நிலை--3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணி செய்து, பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

