ADDED : மார் 26, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், முகளூர் மற்றும் கொப்பகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில், ஓசூர் வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பொம்மலாட்ட பயிற்சி வகுப்பு மற்றும் பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி-யளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரமேஷ்குமார், பொம்மலாட்ட பயிற்சி மற்றும் பொம்மைகள் செய்ய கற்றுக் கொடுத்தார். பள்ளி தலைமையாசிரியர்கள் கனகம், கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.
