ADDED : ஜன 27, 2025 02:38 AM
ஓசூர்: ஓசூர், தேர்பேட்டை மின்நகரிலுள்ள
காயத்திரி திருமண மண்டபத்தில், ராதா கல்யாண மகோத்சவம் நிகழ்ச்சி நேற்று முன்தினம்
துவங்கியது.
விக்னேஸ்வர பூஜை, அஷ்டபதி பஜனை, கோலாட்டம், பரதநாட்-டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சி-யாக நேற்று காலை ராதா கல்யாண மகோத்சவம் துவங்கியது. சேரன்மகாதேவி பாலவெங்கடகிருஷ்ண பாகவதர் மற்றும் அவர்க-ளது குழுவினரால், பஜனை நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற டோலோதஸ்வம், முத்துக்-குத்தல், ராதா ருக்மணி கிருஷ்ண அபிநய அஷ்டகம் நடந்தது.
தொடர்ந்து, ஹிந்து வைணவ சம்பிரதாய முறைப்படி, ராதா, கிருஷ்ண திருக்கல்யாணம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சி, திரு-மாங்கல்ய பூஜை நடந்தது. வேத விற்பன்னர்களின் வேத மந்தி-ரங்கள் முழங்க, கிருஷ்ணர் ராதைக்கு மங்கள திருமாங்கல்யம் அணிவித்து, மாங்கல்யதாரணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திர-ளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

