நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் பகுதியில், இடி, மின்னலுடன் பெய்த கன மழையின்-போது, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்-றன.
ஆத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, 4:00 மணியளவில், இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஆத்துார், நரசிங்கபுரம், கொத்தம்பாடி, செல்லியம்பா-ளையம், கல்பகனுார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மிதமான வேகத்தில் சென்-றன. இரு தினங்களாக, கன மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

