/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 11, 2026 07:09 AM

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மக்தும்கான், பொருளாளர் நித்யானந்தன் முன்னிலை வகித்தனர்.
இதில், பல துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். கிடங்கிலுள்ள எடை தராசும், ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து, அதன் அடிப்படையில் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களை ரேஷன் கடைகளில் இறக்கிய பின், விற்பனையாளர் கையொப்பமிட்ட ரசீது அடிப்படையில் விற்பனை முனையத்தில் பதிவேற்றம் செய்து, சேதார கழிவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

