ADDED : டிச 05, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: பெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழையில், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 2ல் மழைநீர் புகுந்தது. இதில்
பதிவேடுகள், கம்ப்யூட்டர்கள் சேதமாகின.அவற்றை கடந்த, 2 நாட்களாக உலர்த்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதனால் கடந்த, 2 நாட்களாக எவ்வித
புகார் மனுக்களும் பெறாமல் இருந்த நிலையில், நேற்று போலீஸ் ஸ்டேசன் வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில், சாமியானா
அமைத்து, தற்காலிகமாக பொதுமக்களின் புகார் மனுக்களை பெறும் வகையில் பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன்
நடவடிக்கை மேற்கொண்டார். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி புகார் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார்.