sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுத்தை நடமாட்டம் தகவலால் குடியிருப்பு பகுதியில் மக்கள் பீதி

/

சிறுத்தை நடமாட்டம் தகவலால் குடியிருப்பு பகுதியில் மக்கள் பீதி

சிறுத்தை நடமாட்டம் தகவலால் குடியிருப்பு பகுதியில் மக்கள் பீதி

சிறுத்தை நடமாட்டம் தகவலால் குடியிருப்பு பகுதியில் மக்கள் பீதி


ADDED : மே 29, 2025 01:14 AM

Google News

ADDED : மே 29, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள உப்கார் ராயல் கார்டன் பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியை சுற்றி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, நேற்று காலை, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அத்துடன், ஓசூர் வனச்சரக அலுவலகத்திற்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையிலான வனத்துறையினர், உப்கார் ராயல் கார்டன் பகுதியில், சிறுத்தை காலடி தடயம் ஏதும் உள்ளதா என சோதனை செய்தனர். ஆனால், எந்த காலடி தடயமும் சிக்கவில்லை. கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிறுத்தை வந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதால், வனத்துறையினர் நேற்று மாலை, 6:30 மணிக்கு மேல், மீண்டும் உப்கார் ராயல் கார்டன் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என சோதனை செய்தனர். இதுவரை சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் உறுதி செய்யவில்லை.






      Dinamalar
      Follow us