அமைப்புசாரா தொழிலாளர்கள் விபத்து இழப்பீடு தீர்மானம்
அமைப்புசாரா தொழிலாளர்கள் விபத்து இழப்பீடு தீர்மானம்
ADDED : மார் 09, 2026 08:13 AM
அ நிறம் | அளவு
அஞ்செட்டி; கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வீரபத்திர-சுவாமி கோவில் பொது மண்டபத்தில், ஜெய்-பில்டர்ஸ் கட்டுமானம் அமைப்புசாரா பொது தொழிலாளர்கள் மாநில நலச்சங்கம் சார்பில், பொதுக்குழு கூட்டம் மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைவர் ஜெய்கிருஷ்ணன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் பெருமாள், மகளிர் வாழ்வில் மகிழ்ச்சியும், மாற்றமும் என்ற தலைப்பில் பேசினார். செல்வி, சுனிதாலட்சுமி ஆகியோர், மகளிர் மேம்பாடு குறித்து பேசினர்.
கூட்டத்தில், விபத்து ஏற்பட்ட தொழிலாளர்க-ளுக்கு உடனடியாக மருத்துவ செலவிற்கு பணம் விடுவிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு மீண்டும் பணி செய்ய முடியாதவர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்-பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
