sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிறுத்திய அகவிலைப்படியை வழங்கக்கோரி தீர்மானம்

/

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிறுத்திய அகவிலைப்படியை வழங்கக்கோரி தீர்மானம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிறுத்திய அகவிலைப்படியை வழங்கக்கோரி தீர்மானம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிறுத்திய அகவிலைப்படியை வழங்கக்கோரி தீர்மானம்


ADDED : நவ 13, 2024 07:45 AM

Google News

ADDED : நவ 13, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: போக்குவரத்து ஊழியர்களுக்கு, 107 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்காவிடில் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் கூறினர்.

கிருஷ்ணகிரியில், தர்மபுரி மண்டல அளவில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் போராட்ட ஆயத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். இதில், அரசு போக்குவரத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 107 மாதமாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

ஏப்., 2023 முதல் அக்., 2024 வரை, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, பணம் பிடித்தம் இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் டிச., 17ல், 30,000 பேர் பங்குபெறும் அரை நிர்வாண போராட்டத்தை சென்னையில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.மாநில பொருளாளர் பேச்சியப்பன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மண்டல தலைவர் கேசவ செட்டி, செயலாளர் கணேசன், பொருளாளர் சுகஸ்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us