sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானை கூட்டத்தால் நெற்பயிர்கள் நாசம்

/

யானை கூட்டத்தால் நெற்பயிர்கள் நாசம்

யானை கூட்டத்தால் நெற்பயிர்கள் நாசம்

யானை கூட்டத்தால் நெற்பயிர்கள் நாசம்


ADDED : பிப் 06, 2025 05:26 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகள், 3 குழுக்களாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு மேல் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து, 3 குழுக்களாக, 20க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி, பாவாடரப்பட்டி கிராம விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ஒரு ஏக்கர் நெல் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல், மீண்டும் ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு திரும்பின.

இதற்கிடையே, ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் தாயை பிரிந்த, 2 வயது ஆண் குட்டி யானை சுற்றித்திரிகிறது. அதை, மற்ற யானைகள், தங்களுடன் சேர்க்காமல் உள்ளன. அதனால், குட்டி யானையின் நடமாட்டத்தை வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

யானை உணவு உட்கொள்வதால், அதை பிடித்து சிகிச்சையளிக்க அவசியமில்லை என, வனத்துறையினர் கூறுகின்றனர். இருந்தாலும், அதன் நடமாட்டத்தை கண்காணிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலுள்ள குட்டி யானை, தர்மபுரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் யானையின் குட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வனத்துறைக்கு உள்ளது.






      Dinamalar
      Follow us