sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சோதனை சாவடியில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்

/

சோதனை சாவடியில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்

சோதனை சாவடியில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்

சோதனை சாவடியில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்


ADDED : மே 22, 2025 03:11 AM

Google News

ADDED : மே 22, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:தமிழக - ஆந்திர மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா காளிக்கோவிலில், வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது.

இங்கு பணியாற்றும் அலுவலர்கள் டிரைவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தற்காலிக அனுமதி சீட்டு வழங்குவது, கணக்கில் வராத பணத்தை வாகனங்களில் கடத்த அனுமதிப்பது, விதிமீறல்கள் இருந்தாலும் நடைசீட்டுகளில் அபராதம் விதிக்காமல் அனுப்பி விடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் போலீசார் சோதனைச்சாவடியில் நேற்று சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத, 1.43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைச்சாவடியில், பணியிலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சையத் ஜவ்வாது அஹமத்துவிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us