ADDED : அக் 13, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அந்தே-வனப்பள்ளியில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழா நடந்-தது.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜகோபால் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வெங்கடசாமி, முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்-னிலை வகித்தனர். மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் மனோகர் பேசினர். ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.