ADDED : ஜூலை 16, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாரிசெட்டிஹள்ளி அடுத்த எம்.கொட்டாவூர் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த நெடுங்கல்லை சேர்ந்த அரவிந்தன், 30, என்பவரை கைது செய்தனர்.