ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், காமராஜ் காலனியிலுள்ள அரசு மாநக-ராட்சி நடுநிலைப்பள்ளியில் (தமிழ், ஆங்கில வழி), அரிவாள் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
வட்டார மருத்துவ அலு-வலர் அகிலா மற்றும் மருத்துவ அலுவலர் கார்த்-திகா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மரபணு குறைபாட்டால் அரிவாள் நோய் ஏற்படு-வதாகவும், அதன் அறிகுறிகள், விளைவுகள் கண்-டறியும் முறை, மருத்துவ சிகிச்சை ஆகியவை குறித்தும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பற்-றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாணவ, மாணவியரின் ரத்த மாதிரிகள் சேகரிக்-கப்பட்டு, ரத்த சோகை அல்லது ஹீமோகுளோபி-னோபதி, அரிவாள் நோய் கண்டறிய, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமையாசிரியை பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.