/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2.40 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ.2.40 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : டிச 04, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, டிச. 4-
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், கடந்த நவ., மாதத்தில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை.
இந்நிலையில், 613 விவசாயிகள், 1,178 குவியல்களாக, 44 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 235 முதல், 728 ரூபாய் வரை சராசரியாக, 543 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 2.40 கோடி ரூபாய். கடந்த ஒரு மாதத்தில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 3.64 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.