/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா
/
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா
ADDED : மே 09, 2024 06:11 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், 4ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது.
அன்று காலை, 5:00 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சியும், 7:00 மணிக்கு, மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத்தினர் கொடியேற்றமும், பிற்பகல், 2:00 மணிக்கு, அடியார்களின் அருள் வாழ்வு என்ற பொருளில் சொற்பொழிவும், மாலை, கந்திகுப்பம் சொர்ணபைரவர் திருமடத்திலிருந்து திருமுறை நுால்களுடன் அடியார்கள் ஊர்வலம், கூட்டு வழிபாடு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன.
நேற்று காலை, 5:00 மணிக்கு, சிவபூஜை, பசு வழிபாடு, அம்மையப்பர் வேள்வி, காலை, 11:30 மணிக்கு, பெரிய புராணத்தில் நம்பிரான் சிறுத்தொண்ட நாயனார் புராணம் பாராயணம் விளக்கவுரையும், மகேஸ்வர பூஜையையும் பைரவ சுவாமிகள் நடத்தினார். மாலை, 3:00 மணிக்கு, 'சமய ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும்' என்ற தலைப்பில் சொற்பொழிவும், மாலை, 6:00 மணிக்கு, கூட்டு வழிபாடு, பெரியோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.