ADDED : மே 27, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, சூளகிரி வட்டார வேளாண் துறையின் அட்மா திட்டம் மூலம், கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திற்கு, மண் வள மேலாண்மை பயிற்சிக்காக, 40 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு, பேராசிரியர்கள் கதிரவன், மாலதி, செல்வி, ஜெயஸ்ரீ மற்றும் ஆராய்ச்சியாளர் அஷ்வினி ஆகியோர், மண் வள மேலாண்மை தொழில்நுட்பம், உரம், இயற்கை ஊட்டச்சத்து, பயிர் ஊட்டச்சத்து, பொருளாதார நிலை, மண்ணின் குறைகளை தீர்க்கக்கூடிய சிறப்பு மேலாண்மை, மண் வள பாதுகாப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.