/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண்ணில்லா விவசாய முறை; வேளாண் மாணவியர் விளக்கம்
/
மண்ணில்லா விவசாய முறை; வேளாண் மாணவியர் விளக்கம்
ADDED : பிப் 06, 2026 10:35 AM
கிருஷ்ணகிரி: மண்ணில்லா விவசாய முறை குறித்து, வேளாண் கல்லுாரி மாணவியர் விளக்கம் அளித்தனர்.
கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில், அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், விவசாயிகளுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை குறித்து விளக்கம் அளித்தனர். இது விவசாயிகளுக்கு, நடுத்தர தொழில்நுட்பமான மண்ணில்லாத விவசாய முறையை நேரடியாக கற்றுத்தரும் நோக்கத்தோடும், குறைந்த நீரை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுவதற்கான முறையை விளக்குவதாக அமைந்தது.
மேலும், ஹைட்ரோபோனிக்ஸ் முறையின் பயன்கள், பயன்பாடு மற்றும் நடைமுறை செயல்முறைகள் பற்றியும், தங்களது கையேடு மற்றும் மாதிரிகள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் மூலம், அதிக விவசாயிகள் ஹைட்ரோபோனிக்ஸ் முறையை பயன்படுத்தி விவசாயம் செய்ய இயலும் என, வேளாண் கல்லுாரி மாணவியர் தெரிவித்தனர்.

