sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

/

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை


ADDED : மே 31, 2024 03:43 AM

Google News

ADDED : மே 31, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, சிவலிங்கம் மற்றும் உற்சவ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. வரும் ஜூலை, 12ல் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால், காலபைரவ சுவாமி மூலவர் உள்ள அறை சாத்தப்பட்டு, கோவிலுக்கு அருகில் சிவலிங்கம் மற்றும் உற்சவ காலபைரவர் வைத்து யாகம், சிறப்பு பூஜை நடந்தது. சிவலிங்க வடிவில் சிவன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

இதில், ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தட்சிண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us