/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில அளவிலான திறன் போட்டி பி.எம்.சி., டெக் மாணவன் சாதனை
/
மாநில அளவிலான திறன் போட்டி பி.எம்.சி., டெக் மாணவன் சாதனை
மாநில அளவிலான திறன் போட்டி பி.எம்.சி., டெக் மாணவன் சாதனை
மாநில அளவிலான திறன் போட்டி பி.எம்.சி., டெக் மாணவன் சாதனை
ADDED : ஜன 24, 2026 06:43 AM
ஓசூர்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தில், மாநில அளவில், 'தமிழ்-நாடு திறன்கள் - 2025' என்ற நிகழ்ச்சியை கடந்த டிச., மாதம் நடத்தியது.
நடப்பாண்டு நடக்க உள்ள உலக திறன் போட்-டிக்கான தேர்வாளர்களை அடையாளம் காணும் வகையில் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து, பல்வேறு தொழில்நுட்ப கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ஓசூர் பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் கல்-லுாரியின் ஏ.ஐ.எம்.எல்., மாணவன் சிவனேஷ், சி.என்.சி., டர்னிங் பிரிவில் தேர்வு பெற்று, தமிழக அரசு சார்பில் பதக்கம் மற்றும் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவிலான உலக திறன் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். மாணவன் சிவனே ைஷ, பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார், செயலாளர் மலர், இயக்குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்பிரமணியம், துறைத்தலைவர் ஸ்ரீதேவி, நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் சக மாணவர்கள்
பாராட்டினர்.

