ADDED : மார் 23, 2026 07:41 AM
அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஜெய்னுாரை சேர்ந்தவர் பாண்டியன், 42, கூலித்-தொழிலாளி, இவரின் மகள் சோபனா, 13. மாரி-செட்டிஹள்ளி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்-பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், சோபனா சைக்கிளில் மாரி-செட்டிஹள்ளியில் உள்ள தன் பள்ளி தோழி வீட்-டிற்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீட்-டிற்கு திரும்பவில்லை. அவரின் பெற்றோர் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு மேல், பல இடங்களில் தேடிய நிலையில், மாரிசெட்டி-ஹள்ளி சுப்பிரமணி என்பவரின் விவசாய கிணற்றில், சோபனா சடலமாக மிதப்பது தெரிந்து மீட்டனர். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
