sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிமென்ட் பூச்சு உதிரும் கட்டடத்தில் மாணவர்கள்

/

சிமென்ட் பூச்சு உதிரும் கட்டடத்தில் மாணவர்கள்

சிமென்ட் பூச்சு உதிரும் கட்டடத்தில் மாணவர்கள்

சிமென்ட் பூச்சு உதிரும் கட்டடத்தில் மாணவர்கள்


ADDED : ஆக 19, 2025 03:23 AM

Google News

ADDED : ஆக 19, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்துார் அடுத்த, பாப்பாரப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 36 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 2 வகுப்பறை கொண்ட கட்டடம் உள்ளது. இதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கூரை சிமென்ட் பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழும் நிலையில் இருந்தது. பள்ளி நிர்வாகம் பெயர்ந்து விழும் நிலையில் இருந்த சிமென்ட் பூச்சுகளை அகற்றி விட்டு, அப்படியே அந்த கட்டட வளாகத்தினுள் மாணவ, மாணவியரை அமர வைத்து, தொடர்ந்து வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

பள்ளி வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர், சிமென்ட் பூச்சு பெயர்ந்து எப்போது விழுமோ என்ற அச்சத்திலேயே படித்து வருகின்றனர். இது, பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‍

சேதமான பள்ளி கட்டடம் குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான பள்ளி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடத்தை கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us