/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த மாணவர்கள் தர்ணா
/
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த மாணவர்கள் தர்ணா
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த மாணவர்கள் தர்ணா
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த மாணவர்கள் தர்ணா
ADDED : மார் 11, 2025 06:38 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அகரம், சோபனுார் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த, 4ல் ஆண்டு விழா நடந்தது. இதில் மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சியில், பா.ம.க., கட்சியின் ஆல்பத்தில் வெளியான பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர். பாடலின் இடையில் ஒரு மாணவன் வீரப்பன், காடுவெட்டிகுருவின் உருவ படம் பொறித்த டிசர்ட் எடுத்து வந்து நடனமாடிய நிலையில், அதே பாடலில், பா.ம.க., கொடியை குறிக்கும் வகையில் மப்ளரை அணிந்து நடனமாடினர். இது வைரலானது.
இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார், தமிழ் ஆசிரியர் சுப்பிரமணி இருவரிடமும், மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் விசாரணை நடத்தி, விஜயகுமாரை பன்னிஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், சுப்பிரமணியை மேட்டுபுலியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர், தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர் சுப்பிரமணியை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என, பள்ளி முன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக, சி.இ.ஓ., முனிராஜ் கூறியதை அடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.