தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் அதிகரிப்பு

எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் அதிகரிப்பு

எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் அதிகரிப்பு


ADDED : டிச 30, 2024 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: தொடக்கப்பள்ளிகளில், கற்றல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்த கடந்த, 2022-ல் எண்ணும் எழுத்தும் திட்டம் துவங்கப்பட்டது.

இதன் மூலம், அரசு துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாண-வியரின் கற்றல், எழுதுதல், புரிதல் திறன் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியம், களர்பதி அரசு துவக்-கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் சிந்திக்கும் திறன் அதிகரித்துள்ளதாக, அப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செந்தில்-குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

எண்ணும், எழுத்தும் திட்டம், மாணவர்களிடையே மகிழ்வான கற்றலாகவும், குழந்தைகள் விரும்பும் சவால்களை அளிப்பதா-கவும், செயல்வழி கற்றலாகவும், வண்ண மயமான வகுப்பறைக-ளோடு செயல்பட்டு வருகிறது.

இதனால் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் மாணவர்களின் படித்தல் திறன் மற்றும் புரிதல் திறன் மேம்பட்டுள்ளதோடு குழந்தைகள் சுயமாக சிந்திக்கவும், தாங்கள் சிந்தித்தவற்றை பேச்சு மூலமா-கவும், எழுத்து மூலமாகவும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவர்-களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும், புதிய படைப்பா-ளர்களாகவும் விளங்குகின்றனர்.

ஆசிரியர் சொல்வதை மட்டும் செய்வது உண்மையான கல்வியின் நோக்கமல்ல. குழந்தைகள் தன்னுள் இருக்கும் உண்மையான ஆற்றலை உணர்ந்து கொள்ள செய்வதே சிறந்த கல்விமுறையின் நோக்கமாக இருக்கும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us