/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தற்கொலை செய்து கொண்டமாணவன் கண்கள் தானம்
/
தற்கொலை செய்து கொண்டமாணவன் கண்கள் தானம்
ADDED : ஜன 21, 2026 10:49 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நஞ்சாபுரத்தை சேர்ந்-தவர் சின்னசாமி. புதிய ஜனநாயக தொழிற்சங்க துணைத்தலைவ-ராக உள்ளார். இவரது மகன் பகத்சிங், 26. தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் காலை பகத்சிங் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகனை இழந்த அந்த சூழ்நி-லையிலும், சின்னசாமி - சரோஜா தம்பதி, தன் மகனின் இரு கண்களையும் தானமாக கொடுக்க முன்வந்தனர்.
இதையறிந்த, ஓசூர் பிரைட் அரிமா சங்க கண்தான திட்ட தலைவர் ஞானசேகரன் மூலமாக, பெங்களூரு நாராயணா நேத்ரா-லயா டாக்டர்கள் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டன.

