/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : மார் 17, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, 147 துாய்மை பணியாளர்களுக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், ஹெல்மெட், ஒளிரும் ஆடை, பாதுகாப்பு ஷூக்கள் ஆகியவற்றை வழங்கினார். மாநகர நல அலுவலர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

