ADDED : ஏப் 13, 2025 05:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மாயமான மூதாட்டி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனி-யம்மாள், 70. இவரது கணவர் கடந்த, 8 ஆண்டு களுக்கு முன் இறந்து விட்டதால், மகன், மருமகளுடன் வசித்து வந்தார்.
கடந்த, 8ல் வீட்டி லிருந்து வெளியே சென்ற முனியம்மாள் மாய-மான நிலையில், நேற்று முன்தினம் கும்மனுார் தென்பெண்ணை-யாற்றில் சடலமாக மிதந்தார்.
இது குறித்து அப்பகுதி வி.ஏ.ஓ., வெங்கடேசன் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மூதாட்டி சடலத்தை மீட்டனர். விசாரணையில், முனியம்மாளுக்கும் அவரது மருமகள் நாகரா-ணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரிந்தது.இருப்பினும், சமீபத்தில் எந்த தகராறும் இல்லை எனவும், உடல்-நிலை சரியில்லை எனக்கூறி, அரசு மருத்துவ மனைக்கு செல்வ-தாக கூறிச்சென்ற நிலையில், மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், உறவினர்கள் தெரிவித்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

