ADDED : ஜூலை 15, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: அரூர் தாலுகா, பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்.
இவரது மகள் ராகினி ஸ்ரீ, 11; இவர், பாளையம் அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ், மகளுடன், ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றுள்ளார். மாலை, 5:00 மணிய-ளவில், காட்டேரி தனியார் கல்லுாரி அருகே ஊத்தங்கரை - அரூர் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயம-டைந்த சிறுமி ராகினி ஸ்ரீ இறந்தார்.