ADDED : மே 05, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் பரமசிவம், 58,
கொத்தனார்; கடந்த மாதம், 16 மதியம், 1:00 மணிக்கு பாரதியார் நகரில் உள்ள
ஸ்ரீதர் என்பவரது வீட்டில் வேலை செய்த போது, மூன்றாவது மாடியில்
இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
ஓசூர் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம்
உயிரிழந்தார்.ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.