/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நகராட்சியில் அடுத்தடுத்த சர்ச்சை கமிஷனர் அறையில் ரகசிய கேமரா வைத்தது யார்?
/
கிருஷ்ணகிரி நகராட்சியில் அடுத்தடுத்த சர்ச்சை கமிஷனர் அறையில் ரகசிய கேமரா வைத்தது யார்?
கிருஷ்ணகிரி நகராட்சியில் அடுத்தடுத்த சர்ச்சை கமிஷனர் அறையில் ரகசிய கேமரா வைத்தது யார்?
கிருஷ்ணகிரி நகராட்சியில் அடுத்தடுத்த சர்ச்சை கமிஷனர் அறையில் ரகசிய கேமரா வைத்தது யார்?
ADDED : பிப் 07, 2025 04:10 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில், அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் தரப்பு மோதல், ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், கமிஷனர் அறையில் ரகசிய கேமரா வைத்தது யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் கடந்த, ஜன., 25 ல், தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை மட்டும் சுத்தம் செய்ததாக கூறி, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில் வைத்து, சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை, நகராட்சி தலைவர் பரிதாநவாப்பின் கணவரும், நகர, தி.மு.க., செயலாளரு-மான நவாப் திட்டுவதும், பதிலுக்கு ராம
கிருஷ்ணனும் அவரை திட்டும் வீடியோ, நேற்று வைரலானது. நகர, தி.மு.க., செயலாளர் நவாப், நகராட்சி நிர்வாகங்களில் தலையிடுவதாக கூறி, கடந்த ஜன., 29ல் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அரசு ஊழியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் நவாப்பை கண்டித்து, சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி-புரிந்தனர். சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனும், இது குறித்து உயரதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.
அதேபோல, நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், டெங்கு தடுப்பு பணியாளர்களிடம் அத்துமீறி ஆபாசமாக பேசுவ-தாகவும், துப்புரவு பணிகள் செய்ய சொல்வதாகவும் கூறி, தற்கா-லிக டெங்கு தடுப்பு பெண் ஊழியர்கள் கடந்த மாதம், 30ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, கிருஷ்ணகிரி நக-ராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி விடுப்பில் சென்று விட்டார். கடந்த, 29 ல் நகராட்சி ஊழியர்கள் கமிஷனர் அறைக்குள் நுழையும் போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் பீப் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோது, உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிந்தது. நேற்று முன்தினம் பணிக்கு திரும்பிய நகராட்சி கமி-ஷனர் கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தார்.இது குறித்து கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''நகராட்சியில், 4 இடங்களில் டிஜிட்டல் கடிகாரம் உள்ளது. மற்ற இடங்களில் வைக்கப்படாத ரகசிய கேமரா, கமி-ஷனர் அறையில் வைக்கப்பட்டது ஏன். கடந்த, 29ல் கேமரா-வையும் அதிலிருந்த சிப்பும் எடுக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து, தி.மு.க., நகர செயலாளர் நவாப், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் மோதல் காட்சிகள் மட்டும் எப்படி வெளிவந்-தது. கேமரா சிப், நகராட்சி அலுவலகத்தில் வைத்து செல்லப்-பட்ட நிலையில், வீடியோ வெளியானது எவ்வாறு என, போலீசார் தான் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகள், ஆளும் தரப்-பினர் மோதலால், அதிகாரிகள் பலர் விடுமுறையில்
சென்றுள்ளனர். இதனால், வரிவசூல் பாதிக்கப்பட்டுள்ளது. துப்பு-ரவு பணி, குடிநீர் வினியோக பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது, ஆளும் கட்சியின் நகர செயலாளர் நவாப்பின் ஆதிக்கத்தால், கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் முற்-றிலும் முடங்கும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது.