ADDED : ஜூலை 31, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை கும்பார் தெருவை சேர்ந்தவர் லட்சுமிபதி, 60; தேன்கனிக்கோட்டை பெடரல் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
கடந்த, 25 காலை பணியில் இருந்தவர், வங்கி எதிரே கீழே தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமிபதி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

