ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை கும்பார் தெருவை சேர்ந்தவர் வெங்-கடேஷ், 35; மளிகை பொருட்கள் வியாபாரி; நேற்று முன்தினம் மனைவியுடன் தளி அருகே நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு, நேற்று காலை வீடு திரும்பினார்.
அப்போது, முன்-பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்-டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, அரை பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 80,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. வெங்கடேஷ் புகார்படி, தேன்-கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.