sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கெலவரப்பள்ளி அணையில் 3,199 கன அடி நீர்திறப்பால் தென்பெண்ணையில் வெள்ளம்

/

கெலவரப்பள்ளி அணையில் 3,199 கன அடி நீர்திறப்பால் தென்பெண்ணையில் வெள்ளம்

கெலவரப்பள்ளி அணையில் 3,199 கன அடி நீர்திறப்பால் தென்பெண்ணையில் வெள்ளம்

கெலவரப்பள்ளி அணையில் 3,199 கன அடி நீர்திறப்பால் தென்பெண்ணையில் வெள்ளம்


ADDED : அக் 12, 2025 02:52 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து நேற்று, 3,199 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றில் ரசா-யன நுரையுடன் வெள்ளம் கரை

புரண்டு ஓடியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,987 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நா-டகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை நீர்வரத்து, 2,647 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்-வரத்து மேலும் அதிகரித்தது, 3,199 கன அடியானது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 42.97 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அதற்கு மேல் நீரை தேக்கினால், அணைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், 3,199 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி, 6வது நாளாக வெள்ளம் கரை

புரண்டு ஓடியது. ஆனால், நேற்று அதிகளவு ரசாயன நுரை ஏற்-பட்டு ஆற்றில் பெருக்கெடுத்தது. அணை எதிரே தென்-பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்-பாலம் மீது ஒருபுறம் நுரை தேங்கியது. பாதிப்பு இல்லாததால் அவ்வழியாக வாகனங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன.

வெள்ளப்பெருக்கால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதி-களான, கெலவரப்பள்ளி, முத்தாலி, மோரனப்பள்ளி, பேரண்டப்-பள்ளி, தொரப்பள்ளி, ஆலுார், நல்லகானகொத்தப்பள்ளி, உலகம், வெங்கடேசபுரம், காமன்தொட்டி, அட்டகுறுக்கி, பாத்த

கோட்டா ஆகிய, 12 கிராமங்களுக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, நீர்வளத்துறை வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடுத்தது.






      Dinamalar
      Follow us