/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேலம் அருகே 'போதை' மாத்திரை விற்ற மூவர் கைது
/
சேலம் அருகே 'போதை' மாத்திரை விற்ற மூவர் கைது
ADDED : ஜன 27, 2025 03:25 AM
சேலம்: சேலம் மாவட்டம் வீராணம் போலீசார், மன்னார்பாளையம் பிரிவு சாலையில் ரோந்து மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்ப-டும்படி நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தனர். அல்லிக்குட்-டையை சேர்ந்த மணிகண்டன், 24, என்பது தெரிந்தது.
சேலத்தில் விலங்கு கருத்தடை மையத்தில் பணிபுரிவதோடு, போதை ஊசி பயன்படுத்தியிருப்பதும் தெரிந்தது. விசாரணையில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தும் அழகுசமுத்திரம், மணக்காடு கோகுல்ராஜ், 28; ஓமலுார், செங்கனுார் தினேஷ் கண்ணன், 27; அமரகுந்தி கோகுலன், 26, ஆகியோர், மணிகண்டனுக்கு 'போதை' மாத்-திரை வழங்குவது தெரிந்தது.ஆன்லைனில், 25 ரூபாய்க்கு மாத்திரையை வாங்கி, 200 முதல், 300 ரூபாய் வரை, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், தொ-ழிலாளர்களை குறிவைத்து மூன்று பேரும் விற்றுள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், 2,615 போதை மாத்திரை, இரு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

