/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூதாடிய மூவர் கைது 2 ஸ்கூட்டர்கள் பறிமுதல்
/
சூதாடிய மூவர் கைது 2 ஸ்கூட்டர்கள் பறிமுதல்
ADDED : நவ 21, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தேன்கனிக்கோட்டை நகரில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
சாகர் லேஅவுட் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தேன்கனிக்கோட்டை ருக்மான், 23, மகசூத், 32, சையது இயாஸ், 28, ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு ஸ்கூட்டர்கள், 1,000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

