sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

/

ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்


ADDED : மே 29, 2024 07:42 AM

Google News

ADDED : மே 29, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: பேரிகை வழியாக, 1.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்திய மாணவன் உட்பட, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் போலீசார், மாஸ்தி சாலை ஜங்ஷன் பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 1.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 370 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. காரில் வந்த, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சஞ்சீவனுாரை சேர்ந்த டிரைவர் சிவா சிதம்பரம், 28, கனவாபுதுாரை சேர்ந்த, 17 வயதான தனியார் கல்லுாரி பி.காம்., முதலாமாண்டு மாணவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ராஜ் என்பவர் காரை கொடுத்து, பெங்களூரு சென்று குறிப்பிட்ட நபரிடம் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வாணியம்பாடிக்கு வரக்கூறியது தெரிந்தது. புகையிலை பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us