/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : டிச 26, 2025 06:10 AM
ஒகேனக்கல்: கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி, ஒகேனக்கல் காவிரி-யாற்றில் நேற்று, 20,000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்-தனர். இவர்கள், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரியாற்றில் நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 2,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இதனால், அங்குள்ள அருவி-களில் தண்ணீர் குறைந்து, பாறைகள் தென்பட ஆரம்பித்துள்ளன. நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், ஒகேனக்கல்லில் சுற்-றுலா பயணிகளின் எண்ணிக்கை, 20,000க்கும் மேல் காணப்பட்-டது. அவர்கள், ஆயில் மசாஜ் செய்து, மெயின் பால்ஸில் மற்றும் காவிரியாற்றில் குளித்தும், ஒகேனக்கல்லில் பிரசத்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். தொடர்ந்து, பரி-சல்கள், சின்னாறு பரிசல் துறையிலிருந்து, மெயின் அருவி, மணல் திட்டு வழியாக இயக்கப்பட்டது. இதில் சவாரி செய்து, காவிரியாற்றின் அழகை, சுற்றுலா பயணிகள் கண்டு
ரசித்தனர்.

